Saturday, April 20, 2024

ராக்கெட் வேகத்தில் உயரும் கேஸ் சிலிண்டர் விலை – தவிக்கும் பொதுமக்கள் !

Share post:

Date:

- Advertisement -

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் 100 ரூபாய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இந்நிலையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் 14 புள்ளி 2 கிலோ எடையுள்ள சமையல் கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு கூடுதலாக 25 ரூபாய் உயர்த்தப்பட்டு 810 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் மூன்று முறை சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றாம் தேதி 25 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், பிப்ரவரி 15 ஆம் தேதி மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்த மாதத்தில் மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் 100 ரூபாய் அதிகரித்துள்ளது.

ஒரு புறம் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், மறுபுறம் சிலிண்டர் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்த்தப்பட்டு வருவதால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பெட்ரோல் டீசல் மீதான வரிகளை குறைத்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வையும் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...