தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டையில் அரசு உதவிப்பெறும் பெண்கள் பள்ளியில் 20 மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 36 மாணவிகளுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கரோனா
அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 8 ஆம் தேதி முதல் ஒரு மாணவி பள்ளிக்கு வரவில்லை அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அது குறித்து விசாரித்த பொழுது மாணவிக்கு தனியார் மருத்துவமனையில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்றுவருவது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த பள்ளியில் உள்ள அனைத்து மாணவிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்ய பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது . கடந்த 11 ஆம் தேதி 460 மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நேற்று முதல்கட்டமாக
20 மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் 16 மாணவிகள் தஞ்சை அரசு மருத்துவக் மருத்துவமனையிலும், 4 மாணவிகள் திருவாரூர் அரசு கல்லூரி
மருத்துவமனையிலும்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வெளியான இரண்டாம் கட்ட பரிசோதனை முடிவில் மேலும் 36 மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் ஒருவருக்கும் பள்ளி தொற்று உறுதிசெய்யப்பட்டுள்து. தொற்று பாதிப்பு எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளதால் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.