Home » தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 பள்ளிகளில் கொரோனா பரவல் !

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 பள்ளிகளில் கொரோனா பரவல் !

0 comment

தஞ்சாவூர் அருகே 56 மாணவிகளுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவிகள் மூலம் அவர்களின் பெற்றோர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதே தஞ்சை மாவட்டத்தில் மேலும் இரண்டு பள்ளிகளில் கொரோனா பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள 460 மாணவிகளுக்கும் கடந்த 11ஆம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொண்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14.03.2021) முதற்கட்டமாக 20 மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் 16 மாணவிகள் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், 4 மாணவிகள் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அன்றே இரண்டாம் கட்ட பரிசோதனை முடிவில் மேலும் 36 மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, மொத்த எண்ணிக்கை 56 ஆக உயர்ந்து அங்கு பரபரப்பைக் கூட்டியது.

மேலும் மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் 350 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் பெற்றோர் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மீண்டும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் மேலும் இரண்டு பள்ளிகளில் கொரோனா பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மதுக்கூர் அருகே ஆலத்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகப் பெண் உதவியாளர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter