Home » MMS குடும்பத்தினரை சந்தித்த N.R.ரங்கராஜன்! மரியாதை நிமித்தமான சந்திப்பு என குடும்பத்தினர் விளக்கம்!

MMS குடும்பத்தினரை சந்தித்த N.R.ரங்கராஜன்! மரியாதை நிமித்தமான சந்திப்பு என குடும்பத்தினர் விளக்கம்!

0 comment

அதிராம்பட்டினம் நகர முன்னாள் தமாக பொறுப்பாளர்களான MMS குடும்பத்தினரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தற்போது பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என்.ஆர் ரங்கராஜன் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

முன்னதாக என்.ஆர். ரங்கராஜனை திமுகவின் பொறுப்பாளர் எம்எம்எஸ். கரீம் வரவேற்றார். பின்னர் சந்திப்பின் நோக்கம் குறித்து கருத்து தெரிவித்த எம்எம்எஸ். கரீம், ‘எங்கள் குடும்ப நண்பரான என்.ஆர் ரங்கராஜன் எப்போதும் போல் எங்களுடன் இணக்கம் காட்டும் நல்ல மனிதர் என்றும், கொள்கை ரீதியிலாக பிரிந்து கிடக்கிறோமே தவிர எங்களுக்குள் எந்த பிணக்கும் இல்லை என்பதை நிரூபிக்கும் நிகழ்வாகத்தான் இதனை நாங்கள் பார்க்கிறோம்’ என்றார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter