Friday, April 17, 2026

அதிரைக்கு காஸ்டிக் சோடா தொழிற்சாலை வேண்டாம்! அசாதுதீன் உவைசி வலியுறுத்தல்!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது, அரசியல் கட்சியினர் சுழன்று சுழன்று வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நட்சத்திர தலைவர்கள் பலர் தங்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஏஐஎம்ஐஎம் கட்சித்தலைவரும், ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் உவைசி, பட்டுக்கோட்டை தொகுதி அமமுக வேட்பாளர் எஸ்.டி.எஸ். செல்வத்தை ஆதரித்து அதிராம்பட்டினத்தில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.

அப்போது பேசிய அவர், பாசிசத்தை எதிர்க்கும் வல்லமை TTV. தினகரனுக்கு உண்டு என்றும், திமுக பாசிஸவாதிகளுடன் மென்மை போக்கை கையாளுவதாகவும், பெரியாரின் திராவிட மண்ணாக இருக்கும் தமிழகத்தில் மதவாத சக்திகளை ஊக்குவிக்கும்படி திமுகவின் தேர்தல் அறிக்கை உள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும் EPS, OPS வகையறாக்கள் ஓய்வெடுக்கும் நேரம் வந்துவிட்டதாக கூறிய அவர், அடுத்து தமிழகத்தை நல்லதலைவரிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது, அதற்கு தகுதியான தலைவர் TTV. தினகரன் தான் என்றார்.

இறுதியாக திமுகவின் தேர்தல் அறிக்கையில் அதிராம்பட்டினத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலை அமைக்கப்படும் என்ற வாக்குறுதி குறித்து பேசிய அவர், இத்தொழிற்சாலையினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் நாசகார திட்டங்களுடன் வரும் திமுகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்த பொதுக்கூட்டத்தில் பட்டுக்கோட்டை தொகுதி அமமுக வேட்பாளர் எஸ்.டி.எஸ். செல்வம், அமமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை திமுக வேட்பாளரிடம் அதிரை TIYA சங்கம் மனு: 6 முக்கிய...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கா.அண்ணாதுரை அவர்கள், தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம்  (TIYA)...

அதிராம்பட்டினத்தில் துணை ராணுவப் படையினர் பிரம்மாண்ட கொடி அணிவகுப்பு: தேர்தல் பாதுகாப்பிற்காகப்...

அதிராம்பட்டினம்: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் வேளையில், பொதுமக்களிடையே தேர்தல் குறித்த விழிப்புணர்வையும், பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தும் வகையில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் நல்ல மாற்றம் ஏற்பட்டு வருவதாக அதிமுக வேட்பாளர் CV....

பட்டுக்கோட்டை தொகுதியில் அரசியல் சூழல் நாளுக்கு நாள் பரபரப்பாக மாறி வருகிறது. இந்நிலையில், அதிமுக வேட்பாளர் CV சேகர் தனது கருத்தை வெளியிட்டு,...
spot_imgspot_imgspot_imgspot_img