ஒரு ரூபாய் வரலாறு!
பார்க்கக்கூடிய சில விஷயங்களில் மிகவும் அரிதான ஒன்று நாம் பயன்படுத்திய ஒரு ரூபாய். அந்த ஒரு ரூபாய் நோட்டிற்கு இன்றுடன் 101 வயது ஆகிறது.
ரூபாய் நோட்டு இல்லாத டிஜிட்டல் பரிவர்த்தனையை நோக்கி நாடு சென்று கொண்டு இருக்கிறது. ஆனாலும் ரூபாய் நோட்டுகளுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் மதிப்பு இருக்கத்தான் செய்கிறது. தற்போது ஒரு ரூபாய் நோட்டை கண்ணில் பார்ப்பது என்பது அரிதாகிவிட்டது. ஏனெனில் அதன் மதிப்பு குறைந்து போய்விட்டது.
ஆனாலும் அந்த காலம் முதல் இந்த காலம் வரை, ஒத்த ரூபா கூட இல்லையா? என்பது வழக்கு சொல்லாக இருக்கிறது. அந்த ஒத்த ரூபாய் நோட்டுதான் தற்போதைய புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கெல்லாம் முன்னோடி என்று சொல்லலாம். இந்தியாவில் கடந்த 30-11-1917-ம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட ஒரு ரூபாய் நோட்டுக்கு இன்றுடன் 101 வயது ஆகிறது.
இந்தியாவில் முதன் முதலாக கி.பி.1770-ம் ஆண்டு பேங்க் ஆப் இந்துஸ்தான் என்ற தனியார் வங்கி மூலம்தான் ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது. பின்னர், ரூபாய் நோட்டுகள் இந்திய அரசின் அதிகாரப்பபூர்வ நோட்டாக கடந்த 6-8-1861-ம் ஆண்டு முதல் வெளியானது. முதலில் வெளியான 10 ரூபாய் நோட்டு ஒரு பக்கம்தான் அச்சிடப்பட்டு இருக்கும். பின்புறம் வெள்ளையாகவே இருந்தது.
இந்த நிலையில் ஒரு ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் கடந்த 30-11-1917-ம் ஆண்டு அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இரு பக்கமும் அச்சிடப்பட்ட முதல் நோட்டும் இதுதான். அதில் 5-ம் ஜார்ஜ் மன்னரின் உருவம் அச்சிடப்பட்டு இருக்கும்.
இதைத்தொடர்ந்து கடந்த 1935-ம் ஆண்டு முதல், நோட்டு அச்சிடும் முழு அதிகாரத்தையும் இந்திய ரிசர்வ் வங்கி ஏற்றது. முதலில் வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் நோட்டில் தமிழ் உள்பட 8 மொழிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. தற்போது வெளியாகும் ரூபாய் நோட்டுகளில் 15 மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. 1940-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி வெளியிட்ட 1 ரூபாய் நோட்டில் 6-ம் ஜார்ஜ் மன்னரின் உருவம் வெளியிடப்பட்டது. சுதந்திரத்துக்கு பிறகு வெளியான நோட்டில் அப்போதைய நிதித்துறை செயலாளர் கையொப்பம் இடம் பெற்றது. ஜார்ஜ் மன்னருக்கு பதிலாக அசோக் ஸ்தூபி சின்னம் இடம் பெற்றது.
1952-ம் ஆண்டு முதல் 1956-ம் ஆண்டு வரையிலும், 1958-ம் ஆண்டு முதல் 1962-ம் ஆண்டு வரையிலும், 1982-ம் ஆண்டிலும் ஒரு ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படவில்லை. மீண்டும் கடந்த 2015-ம் ஆண்டு ஒரு ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டு வெளியானது. ஒரு ரூபாய் நோட்டு அச்சடிக்க அரசுக்கு ரூ.1.14 பைசா செலவாகிறது.
More like this
மல்லிப்பட்டினத்தில் மமக கொடியேற்றம் !
மனிதநேய மக்கள் கட்சியின் 17ஆம் ஆண்டு துவக்க தினத்தையொட்டி தஞ்சை தெற்கு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் கட்சி...
அதிரையில் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், வாக்காளர்கள் கலந்தாய்வு கூட்டம் !
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 9,10.20 ஆகிய வார்டுகளில் மேம்பாட்டு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் MMS வாடியில் நகர்மன்ற தலைவர் MMSதாஹிரா அம்மாள்...
அல்ஃபாசி மொய்தீன் வஃபாத் !
அதிராம்பட்டினம் ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் A-Z அப்துல் லத்தீஃப் அவர்களின் மகனும்,அபுல் ஹசன்,உமர் இவர்களின் சகோதரரும் ,மர்ஹும் அப்துல் சலாம் அவர்களின்...