Friday, March 29, 2024

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று பாதிப்பு!

Share post:

Date:

- Advertisement -

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது மனிபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்குக் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா நெகட்டிவ் என வந்தது. இருப்பினும், இரண்டு நாட்களாக அவருக்குத் தொடர் காய்ச்சல் இருந்தது. இதன் காரணமாக அவர் பெங்களூரு ராமையா நினைவு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மீண்டும் மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் கொரோனா காரணமாக மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது மனிபால் மருத்துவமனைக்கு எடியூரப்பா மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்குச் சிறப்பு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. எடியூரப்பாவின் மகள் பத்மாவதிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது குறித்து இன்று காலை அவர் சுகாதார துறை அமைச்சர் சுதாகர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும், கர்நாடாவில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கும் அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். கடந்த சில தினங்களாகவே, அவருக்கு உடல் சோர்வும், காய்ச்சலும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

78 வயதாகும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொரோனாவால் பாதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனாவால் அவர் பாதிக்கப்பட்டார். அப்போதும் அவர் மனிபால் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆகஸ்ட் 2ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு எட்டு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், ஆகஸ்ட் 10ஆம் தேதி அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் அங்கு 14,738 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும், 66 பேர் கொரோனாவால் பலியாகினர். கொரோனாவைக் கட்டுப்படுத்த கர்நாடகாவிலுள்ள சில மாவட்டங்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...