Home » அதிரை: அடையாளம் தெரியாத ஆண் பிணத்தை இந்து முறைப்படி அடக்கம் செய்த தமுமுகவினர் !

அதிரை: அடையாளம் தெரியாத ஆண் பிணத்தை இந்து முறைப்படி அடக்கம் செய்த தமுமுகவினர் !

by
0 comment

அதிராம்பட்டிணம் அருகே உள்ளது கருங்குளம் கிராமம்.

அங்கு அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக தமுமுகவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு சடலத்தை தமுமுகவின் அவசர ஊர்தி மூலம் மருத்துவ அணியினர் மீட்டனர்.

பின்னர் உடலை அதிரை அரசு மருத்துவமனையின் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டது.

உடற்கூறாய்வு முடிந்தவுடன் உடலை தமுமுகவின் மருத்துவ அணியிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

இதனை பெற்றுகொண்ட அவ்வமைப்பினர் இந்து முறைப்படி சடங்குகளை முடித்து இந்து மயானத்தில் அடக்கம் செய்தனர்.

இந்த நிகழ்வில் காவல்துறை உதவி ஆய்வாளர் மதி, தமுமுகவின் மருத்துவ அணியின் பொறுப்பாளர்கள் கனி, இப்ராஹீம், ஃப்த்தாஹ், இம்ரான், சமூக ஆர்வலர் ஹசன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு அடக்கம் செய்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter