தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் திமுக கூட்டணி 161 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 72 தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் 1 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றன. திமுக கூட்டணி 161 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சியை பிடிப்பது உறுதியாகியுள்ளது.
இதன்மூலம் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதவியேற்க இருப்பது உறுதியாகியுள்ளது. திமுகவின் இந்த வெற்றியை அடுத்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் திமுக மற்றும் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.