நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் கா. அண்ணாதுரை, அதிமுக சார்பில் தமிழ் மாநில காங்கிரசின் என்.ஆர். ரெங்கராஜன், அமமுக சார்பில் எஸ்.டி.எஸ். செல்வம், நாம் தமிழர் சார்பில் கீர்த்திகா அன்பு, மக்கள் நீதி மய்யம் சார்பில் டாக்டர். சதாசிவம் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.
கடந்த ஏப்ரல் 6ம் தேதி பதிவான வாக்குகள் இன்று காலை பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்எண்ணப்பட்டன. இதில் திமுக வேட்பாளர் கா. அண்ணாதுரை, அதிமுக வேட்பாளர் என்.ஆர். ரெங்கராஜனை 25,221 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
பட்டுக்கோட்டை தொகுதியில் எண்ணப்பட்ட வாக்குகள் விவரம் :
கா. அண்ணாதுரை(திமுக) – 77698
என்.ஆர். ரெங்கராஜன்(அதிமுக கூட்டணி) – 53169
கீர்த்திகா அன்பு(நாம் தமிழர்) – 10634
சதாசிவம்(மக்கள் நீதி மய்யம்) – 3044
எஸ்.டி.எஸ். செல்வம்(அமமுக) – 5160
பாலகிருஷ்ணன்(சுயேட்சை) – 23233
நோட்டா – 1013