Friday, March 29, 2024

‘நாளை எம்எல்ஏ-க்கள் கூட்டம் ; ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா’ – மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

Share post:

Date:

- Advertisement -

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் ஞாயிறன்று வெளியானது. திமுக கூட்டணி கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் திமுக அரியணையில் அமரப்போகிறது. காலை முதலே திமுக முன்னணியில் இருந்தது.

தேர்தல் வெற்றி முடிவுகள் தெரிந்த உடன் திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் அறிவாலயத்தில் கூடினர். கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்த நிலையிலும் உற்சாகமாக பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினர்.

கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் தனது வெற்றிச்சான்றிதழைப் பெற்றுக்கொண்டார். அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் வெற்றிச்சான்றிதழை வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் திமுகவிற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். அப்போது மு.க. ஸ்டாலினிடம் பதவியேற்பு விழா எங்கே எப்போது நடைபெறும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மு.க ஸ்டாலின், இன்னும் முழுமையாக சில தொகுதிகளில் வெற்றி நிலவரம் வராததால் வந்தவுடன் பதவியேற்பு இருக்கும் என்றார்.

செவ்வாய்கிழமையன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ கூட்டம் நடைபெறும். ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா ஆடம்பர விழாவாக இல்லாமல் மிகவும் எளிமையாகவே இருக்கும். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஆளுநர் மாளிகையிலேயே தனது பதவியேற்பு விழா நடைபெறும்.

பதவியேற்பு விழாவிற்கான தேதியை எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தி அறிவிப்போம் என்றார். தேசிய தலைவர்களின் அறிவுரை கேட்டு செயல்படுவேன் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...