அதிரை சகோதர்கள் என்னும் பெயரில் வாட்ஸ்அப் குழுமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. குழுமம் செயல்பட்டு ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி பள்ளிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகின்றன இதை போன்ற வாட்ஸ் ஆப்பிள் குழுமம் இயங்கி நிகழ்ச்சி நடத்துவது புதிதாக உள்ளது. இக்குழுமம் அட்மின்கள் குழுமத்தில் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அதிரை வாசிகளிடம் பணம் வசூலிக்கப்பட்டு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.
இக்குழுமம் சார்பில் அதிரையில் வருமானம் குறைவான பள்ளிகளுக்கு இஃப்தாருக்கான நிதியுதவி அளித்து, இஃப்தார் நிகழ்ச்சிகள் கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் நடத்தப்பட்டன.
அதேபோல் இந்த ஆண்டும் சிறப்பாக நோன்பு கஞ்சி வினியோகம் நடத்தி வருகின்றனர்.
அதனைத்தொடர்ந்து இன்று வியாழன்கிழமை ( 06/05/2021) இன்று M.S. நகர் தெருவில் அமைந்துள்ள மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் அதிரை சகோதரர்கள் வாட்ஸ் அப் குழுமம் சார்பாக நோன்பு கஞ்சி நிதி உதவி வழங்கப்ட்டது