Home » தஞ்சை தெற்கு மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!!

தஞ்சை தெற்கு மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!!

0 comment

கடந்த மாதம் 13ம்தேதி ரமலான் பிறை பார்க்கப்பட்டு முஸ்லிம்கள் நோன்பை துவங்கினர்.
அதிகாலை முதல் பசித்து இருந்து சூரியன் மறைந்த பின் நோன்பு திறப்பார்கள். அதுவரை தண்ணீர் கூட அருந்தாமல் ஒரு மாத காலம் நோன்பு கடை பிடித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று சென்னை மற்றும் குமரியில் பிறை தென்பட்டதாகவும், அதனால் இன்று வியாழக்கிழமை ஈதுல் ஃபித்ர் என்னும் நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைமையகம் அறிவிப்பு செய்திருந்தது.

அதன்படி தஞ்சை தெற்கு மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத்தினர், கொரானா பரவல் காரணமாக வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டதால் அவர் அவர் வீடுகளிலேயே நோன்பு பெருநாள் தொழுகையை நிறைவேற்றி கொண்டனர். கொரானா பரவலின் தாக்கம் குறையவும், மக்கள் நோய் தோற்றில் இருந்து காக்கப்படவும், பாலஸ்தீன மக்களுக்காகவும் இறைவனிடம் வேண்டிக் கொண்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter