Friday, April 19, 2024

அதிரையில் குழந்தைகளை குறிவைத்து திருட்டு! தங்க வளையல்கள் கொள்ளை!!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினத்தில் ஈத் பெருநாள் நேற்று(14-05-21) கொண்டாடப்பட்டது. அப்போது புதுத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் பெண்கள் பெருநாள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் தொழுவதற்கு அனுமதி கோரியுள்ளனர் . தொழுவதற்கு அனுமதி அளித்துள்ளனர் அவ்வீட்டினர். ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்றிய பின் அவ்விருவரும் அங்கிருந்து அவசரகதியாக கிளம்பியுள்ளனர். இதனை அவ்வீட்டினர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இதனிடையே திடீரென அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தை காணாமல் போயுள்ளது. உடனே குழந்தையை பெற்றோர் தேடியுள்ளனர். அப்போது வாசலில் படுத்த நிலையில் குழந்தை இருந்துள்ளது. மேலும் அக்குழந்தையின் கையில் இருந்த இரண்டரை சவரன் தங்க வளையல்கள் காணாமல் போயுள்ளது. அதுமட்டுமின்றி குழந்தை மயக்க நிலையில இருந்துள்ளது.

இதனால் பதற்றமடைந்த பெற்றோர் அந்த மர்ம நபர்களை தேடியுள்ளனர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இது போன்ற கொள்ளை கும்பல் அதிரை உள்ளிட்ட இஸ்லாமியர்கள் வசிக்கும் ஊர்களில் கைவரிசை காட்டி வருகிறார்கள் என்றும், இவர்களை போலிசார் தனிப்படை அமைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...