Home » இதுதான் விதியோ விதியின் சதியோ?

இதுதான் விதியோ விதியின் சதியோ?

0 comment

காற்று மாசற்று சுத்தமாக இருக்கிறது ஆனால் முககவசம் அணிவது கட்டாயம்.

சாலைகள் வெறிச்சோடி உள்ளன ஆனால் நீண்ட தூர பயணம் போக முடியாது.

மக்களின் கைகள் கழுவிக்கழுவி சுத்தமாக உள்ளன ஆனால் ஒருவருக்கொருவர் கைகுலுக்கக்கூடாது.

நண்பர்களுக்கு நிறைய நேரமிருக்கிறது ஆனால் இதுதான் விதியோ விதியின் சதியோ?ஒன்று சேர முடியாது.

சுவையாக சமைக்கத்தெரியும் ஆனால் யாரையும் விருந்துக்கு அழைக்க முடியாது.

ஞாயிறுகள் எதிர்பார்க்க வைத்தன திங்கள்கிழமைகள் சுமையாக இருந்தன ஆனால் இப்போது நாட்கள் நகர மறுக்கின்றன.

பணம் வைத்திருப்பவர் அதை செலவழிக்க வழியில்லாமல் இருக்கிறார்.

பணமில்லாதவரோ அதை சம்பாதிக்க வழியில்லாமல் இருக்கிறார்.

நேரமோ இப்போது ஏராளமாக உள்ளது ஆனால் கனவுகளை மெய்ப்பிக்க வழியில்லை.

குற்றவாளி நம்மைச்சுற்றி இருக்கிறான் ஆனால் கண்ணுக்கு தெரியாமல்.

கடைசியாக ஒன்று..

நம்முடன் வாழ்ந்து இம்மண்ணைவிட்டு மறைபவரை கூட வழியனுப்ப முடியவில்லை.

காரணம் கொரோனா எனும் பெரும் தொற்று நோய் உள்ள சூழலில் வாழுந்துக்கொண்டு வருகிறோம்.

ட்டாயம் முகக்கவசம் அணிவோம்
கொரோனாவை வெல்வோம்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter