Monday, January 20, 2025

அதிரை கடற்கரைத்தெருவிற்கு இலவசமாக நோயை பரப்பும் பேரூராட்சி நிர்வாகம்!!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம்,கடற்கரைத்தெருவில் வீடுகளில் இருந்து எடுக்கும் திடக்கழிவுகளை கடற்கரைத் தெரு மைதானம் (ITI) வழியாகவே பேரூராட்சி துப்புரவாளர்கள் கொட்டி விடுகின்றனர்.

இந்த குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்துவதில்லை.இது குறித்து கேட்கையில் அப்பகுதி மக்கள் கூறியதாவது; பொதுவாக அதிரை பேரூராட்சி நிர்வாகத்தால் கடற்கரைத்தெரு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.இந்த இடத்தில் திடக்கழிவு குப்பைகளை துப்புரவு ஊழியர்கள் கொட்டிவிட்டு சென்று விடுகின்றனர்.மூன்று,நான்கு நாட்கள் அந்த குப்பையை யாரும் அள்ள வருவதில்லை.இதுகுறித்து யாராவது பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டால் மட்டும் தான் குப்பைகள் அப்புறப்படுத்திகின்றனர்.

மேலும் குப்பைகள் எடுக்க பயன்படுத்தும் வாளிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.இதனால் டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.அதிகாரிகள் பல இடங்களில் தண்ணீர் தேங்கி டெங்கு கொசு உருவாகும் சூழல் இருந்தால் அபராதம் விதிக்கின்றனர் என்ற செய்தி பார்க்க முடிகிறது.ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக பேரூராட்சி நிர்வாகமே நோயை பரப்புகின்ற அளவிற்கு சுகாதர சீர்கேட்டை உருவாக்கி வருகிறது என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த வழியாக தான் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் செல்கின்றனர்.இந்த பகுதியில்
தொடர்ந்து துர்நாற்றம் வீசுகிறது.இதனால் அப்பகுதி வழியாக செல்வதற்கே யோசிக்கின்றனர்.இதனை உடனுக்குடன் அங்கு கொட்டப்படும் குப்பைகளை,தெருப்பகுதியில் இருக்கும் குப்பைகளையும் அப்புறப்படுத்திட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் தொடர் கோரிக்கையாக இருக்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மல்லிப்பட்டினத்தில் மமக கொடியேற்றம் !

மனிதநேய மக்கள் கட்சியின் 17ஆம் ஆண்டு துவக்க தினத்தையொட்டி தஞ்சை தெற்கு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் கட்சி...

அதிரையில் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், வாக்காளர்கள் கலந்தாய்வு கூட்டம் !

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 9,10.20 ஆகிய வார்டுகளில் மேம்பாட்டு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் MMS வாடியில் நகர்மன்ற தலைவர் MMSதாஹிரா அம்மாள்...

அல்ஃபாசி மொய்தீன் வஃபாத் !

அதிராம்பட்டினம் ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் A-Z அப்துல் லத்தீஃப் அவர்களின் மகனும்,அபுல் ஹசன்,உமர் இவர்களின் சகோதரரும் ,மர்ஹும் அப்துல் சலாம் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img