இறைவனின் அங்கீகாரம் மட்டுமே போதுமானது – INTJவேலூர் மாவட்ட பேரணாம்பட்டை சேர்ந்த பெண்மணி வேலூர் அடுக்கம்பாரை அரசு மருத்துவமனையில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உயிர் இழந்தார். உறவினர்கள் மூலம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை தொடர்பு கொண்டதன் அடிப்படையில் கொட்டும் மழையிலும் கண்ணியமான முறையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் சர்பராஸ் மற்றும் நிர்வாகிகளான அர்ஷத், முபாரக் அலி, முபாரக், அப்ரார்(ISF), ஷேபாஸ், பேட்டு உவேஸ் ஆகியோர் கொட்டும் மழையிலும் நல்லடக்கம் செய்தனர்.அரசின் அங்கீகாரத்தை விட இறைவனின் அங்கீகாரம் மட்டுமே போதுமானது என இந்திய தவ்ஹீத் ஜமாத்தினர் தெரிவித்துள்ளனர்.