Home » அதிரையை குளிர்வித்த அழகு மழை!!

அதிரையை குளிர்வித்த அழகு மழை!!

by
0 comment

அதிராம்பட்டினத்தில் இன்று மாலை மேகமூட்டத்தோடு குளிர் காற்று வீச தொடங்கியது. கடந்த சில நாட்களாக ஊரடங்கு மற்றும் கத்திரி வெயிலும் வெப்பமான காந்தலாலும் சிரமப்பட்ட அதிரை மக்களுக்கு வரபிரசாதமாக இறைவனின் கருணையாக லேசான இடி மின்னலோடு தூறல் மழை பெய்து ஊர் நிலங்களையும் ஊர் மக்களின் மனங்களையும் குளிர்வித்தது.

நோன்பு பெருநாள் முடிந்ததோடு அடுத்த ஆறு நோன்பின் இறுதி நாளான இன்று இறைவனின் ஆகபெரும் கிருபையாக குளிர் காற்றோடு சிறுமழை பெய்ததால் வந்த மண் வாசனை கொரானோ நோயின் கோர தாண்டவத்தை குறைக்க வேண்டும் என்ற மனக்குமுறல் மக்களிடம் எழுந்ததை காண முடிந்தது.

ஒருபக்கம் கொரானோவின் கோரப்பிடி மறுபக்கம் அதனால் ஊரடங்கு, இன்னொரு பக்கம் வறுத்தெடுக்கும் கத்திரி வெயில், ஆறு நோன்பின் சோர்வு இவை அனைத்தையும் ஒரு மழை மாற்றியிருக்கிறது என்றால் அது மிகையாகாது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter