Home » தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா ? – மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா ? – மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

0 comment

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இரவு 10 முதல் காலை 4 மணி வரை இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ளன. இருப்பினும், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால், கடந்த 10ஆம் தேதி வருகிற 24ஆம் தேதி காலை 4 மணி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட்டது. தொற்று பரவலை கட்டுப்படுத்த இ-பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

லாக்டவுன் அறிவிக்கப்பட்டும் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது ஒரே நாளில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு வருகிற 24ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. ஆனால், இந்த முழு ஊரடங்கு என்பது பாதிப்பை கட்டுப்படுத்த போதுமானதாக இருக்காது என்றும், கட்டுப்பாடுகளை அதிகரித்து ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று கொரோனா சிகிச்சை குறித்து ஆய்வு மேற்கொண்டார். கொரோனா சிகிச்சை மையங்களையும் திறந்து வைத்தார்.

இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தக் கூட்டத்தில் கலெக்டர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிஎம்ஆர் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் கொரோனா பரவல் மற்றும் பாதிப்பு, உயிரிழப்பு குறித்து விரிவாக ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையின் அடிப்படையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்திலும் தற்போது அமலில் உள்ள ஊரடங்கை மேலும் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட அதிக வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter