Home » அதிரையில் மின் தடையானால் செல்போனில் பேச இயலவில்லை !

அதிரையில் மின் தடையானால் செல்போனில் பேச இயலவில்லை !

0 comment

வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வோடாஃபோன் நிறுவனத்தின் மீது வழக்கு?

அதிராம்பட்டினம் சதாம் நகரில் வசிப்பவர் அப்துல் ரஷீது சமூக ஆர்வலரான இவர் கொரோனா கால உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார்.

இவர் வோடாஃபோன் நிறுவனத்தின் சந்தாதாரர் ஆவர்.

இந்த நிலையில் இவரது செல் போனுக்கு அவசரகால உதவிகள் கேட்டு அவ்வபோது போன் கால்கள் வருவது வழக்கம்.

அந்த வகையில் இன்று(02-06-2021) காலை ஒரு அழைப்பு வந்துள்ளது அதனை பேசிக்கொண்டுள்ள நேரத்தில் அதிராம்பட்டிணத்தில் மின் தடை ஏற்ப்பட்டது.

இதனால் இவர் பேசி கொண்டிருந்த செல்போன் துண்டிக்கப்பட்டு விட்டன.

எதிர் முனையில் பேசிய நபருக்கு என்ன நேர்ந்ததோ என தெரியாமல் திகைத்து நின்றுள்ளார் ரஷீத்.

வோடாபோன் நிறுவனம் வழங்கும் மட்டமான சேவையால் வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருகிறார்கள் என்றும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறையின் உதவியை நாட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

காவல்த்துறை சம்ந்தபட்ட நிறுவனத்தின் மேலாளரை அழைத்து இப்பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும், இல்லையேல் சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை ஒன்றினைத்து போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter