108
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 49 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர். அதில் சென்னை கிழக்கு இணை ஆணையராகப் பணியாற்றிய வி. பாலகிருஷ்ணன் ஐபிஎஸ், ஐஜி-யாக பதவி உயர்வு பெற்று மத்திய மண்டல ஐஜி-யாக பணியிடமாற்றம் செயய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை திருச்சியில் உள்ள அலுவலகத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவராக(ஐஜி) வி. பாலகிருஷ்ணன் பதவியேற்றுக்கொண்டார். ஏற்கனவே இவர் திருச்சி சரக டிஐஜி-யாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.