முகநூலில் முகம்மது நபி குறித்து கேவலமாக சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட சந்தோஷ் தனபால் என்ற சமூக விரோதியை கைது செய்ய வலியுறுத்தி அதிரை காவல்நிலையத்தில் இஸ்லாமியர்கள் ஒன்றாக திரண்டு புகார் அளித்தனர். இதனையடுத்து சம்மந்தப்பட்ட முகநூல் ஐடியின் பெயரில் போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் போன்ற பல்வேறு சமூகத்தினர் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் தேசத்தின் பொது அமைதியை கெடுத்து கலவரத்தை தூண்ட நினைக்கும் தீவிரவாதிகளின் எண்ண நிறைவேறாது என்று இஸ்லாமியர்கள் சூளுரைத்துள்ளனர். மேலும் சமூக விரோதி சந்தோஷ் தனபாலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!
அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...
அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...





