முகநூலில் முகம்மது நபி குறித்து கேவலமாக சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட சந்தோஷ் தனபால் என்ற சமூக விரோதியை கைது செய்ய வலியுறுத்தி அதிரை காவல்நிலையத்தில் இஸ்லாமியர்கள் ஒன்றாக திரண்டு புகார் அளித்தனர். இதனையடுத்து சம்மந்தப்பட்ட முகநூல் ஐடியின் பெயரில் போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் போன்ற பல்வேறு சமூகத்தினர் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் தேசத்தின் பொது அமைதியை கெடுத்து கலவரத்தை தூண்ட நினைக்கும் தீவிரவாதிகளின் எண்ண நிறைவேறாது என்று இஸ்லாமியர்கள் சூளுரைத்துள்ளனர். மேலும் சமூக விரோதி சந்தோஷ் தனபாலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
More like this

அதிராம்பட்டினம் ஐயுஎம்எல் சார்பில் தேர்தல் நிதி வழங்கப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) சார்பில், வரும் தேர்தலில் வாணியம்பாடி மற்றும் பாபநாசம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்காக,...

இந்தியயூனியன் முஸ்லிம்லீக் மாநில பொதுச் செயலாளருக்கு தஞ்சை நிர்வாகிகள் பாராட்டு.
அதிராம்பட்டினம் ஏப் 11தஞ்சாவூர் மாநகராட்சி இந்திய யூனியன் முஸ்லிம்லீக் 47வது வார்ட் உறுப்பினர் ஜெ. சரீப், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநில பொதுச்...

தேர்தல் களம்: அண்ணாத்துரையின் செல்வாக்கு!
பட்டுகோட்டை தொகுதியில் கா. அண்ணாத்துரை (திமுக) அவர்களைப் பொறுத்தவரை கள நிலவரம் தற்போது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. கடந்த முறை பெற்ற...





