Home » பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து மல்லிப்பட்டிணத்தில் மீனவர்கள் நூதன போராட்டம்..

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து மல்லிப்பட்டிணத்தில் மீனவர்கள் நூதன போராட்டம்..

by admin
0 comment

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மல்லிப்பட்டினத்தில் மீனவர்கள் கட்டுமர படகை தோளில் சுமந்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் பெட்ரோல் டீசல் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்தும் மத்திய அரசு அதனை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் விசைப்படகு மீனவர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் மல்லிபட்டினம் தாஜூதீன் மற்றும் ஏராளமான விசைப்படகு மீனவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர் அப்போது மீனவர்கள் ஆரம்ப காலத்தில் புழக்கத்திலிருந்த கட்டுமரத்தை தள்ளுவண்டியில் வைத்து தள்ளியும் மீனவர்கள் கட்டுமரத்தை தோளில் சுமந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்பு செய்தியாளரிடம் தேசிய மீனவர் பேரவை தலைவர் தாஜூதீன் கூறுகையில், மத்திய அரசு மீனவர்களுக்கு டீசல் உற்பத்தி விலைக்கே வழங்க வேண்டும். மீனவர்கள் மீது தேவையற்ற வரிவிதிப்பு போடக்கூடாது. தொடர்ந்து எரிபொருள் விலை உயர்ந்தால் அனைத்து மாவட்ட மீனவர்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter