தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி, மல்லிப்பட்டினத்தில் தொடர் கொரோனா தடுப்பூசி முகாமை அமைத்து தர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரக்கூடிய நிலையில் அதனை முற்றிலும் தடுத்துவிடும் வகையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதிகளவில் தடுப்பூசிகளை போடுவதற்கு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.பொது மக்களும் ஆர்வத்துடன் தடுப்பு ஊசிகளை போட்டுக் கொள்கின்றனர்.
இந்நிலையில் மல்லிப்பட்டினத்தில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள பல்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது.ஆகவே சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியிலே தொடர்ந்து தடுப்பூசி முகாம்கள் செயல்பட ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.