உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்தாலும், இந்தியாவில் பெட்ரோலின் விலை ரெக்கை கட்டி பறக்கிறது.
இதனால் அத்தியாவசிய பொருட்களின் மீது விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
கடந்த சில நாட்களாகவே சதத்தை நெருங்கும் பெட்ரோல் விலையால் வாகன ஓட்டிகளின் வயிறு பற்றி எரிகிறது.
ஒரு பக்கம் கொரோனாவின் தாக்கம் மறுபக்கம் போதிய வருமானமின்றி தவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், அதிராம்பட்டினம் எரிபொருள் நிரப்பும் நிறுவனங்களுக்கு சென்ற வாகன ஓட்டிகளுக்கு அதிரச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் இன்றை பெட்ரோலின் விலை 100.03 என நிர்ணயிக்கப்பட்டு இருப்பதை கண்ட வாகன ஓட்டிகள் கடுப்பில் நிரப்பி சென்றதை காண முடிந்தது.
ஆஹா ஓஹோ.. இந்தியாவின் அவலம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் காவிகளே காரி உமிழும் காலம் விரைவில் வரும் என எதிர்பார்ப்பதாக ஆக்டிவாவில் வந்த ஆனந்தன் கூறி சென்றார்.