அதிராம்பட்டினம் பேரூந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கொரானோ எனும் கொடிய அரக்கனை இப்பூவியை விட்டு விரட்டும் சமுதாய பணியில் விசிகவும் செயலாற்றி வருகிறது.
அதன் ஒருபகுதியாக அதிராம்பட்டினத்தில் நகர செயலாளர் பன்னீர் செல்வம் தலைமையில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் மற்றும் விழிப்புணர்வு வழிகாட்டல்கள் செய்து காண்பிக்கபட்டது. இதில் நகர துணை செயலாளர் கௌதமன், சுசேந்திரன் மற்றும் கத்தார் மண்டல நிர்வாகி சாதிக் மற்றும் விசிக அதிரை நகர பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் முககவசம், சமூக இடைவெளி விட்டு கலந்துக் கொண்டனர்.