Home » தஞ்சை மாவட்டத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு தேவை – இரட்டை இலக்கத்தில் இறப்பு விகிதம் அதிகரிப்பு !

தஞ்சை மாவட்டத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு தேவை – இரட்டை இலக்கத்தில் இறப்பு விகிதம் அதிகரிப்பு !

by
0 comment

கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

ஆனால் தஞ்சை மாவட்டத்தை பொருத்தமட்டில் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மாநிலத்தில் சில தளர்வுகளை அரசு அறிவித்திருந்த நிலையில், பொதுமக்களும், வியாபாரிகளும் கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவதால் இத்தொற்று இன்னும் குறையவில்லை என மருத்துவ வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், அரசு ஒட்டுமொத்தமாக தளர்வுகளை அளிக்க திட்டமிட்டு வருகிறது.

ஆனால் எங்கள் மாவட்டமான தஞ்சை மாவட்டத்தில் மட்டும் நாள்தோறும் கொரோனாவினால் இறப்பு விகிதம் இரட்டை இலக்கத்தை அடைந்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு கொரோனா தாக்கம் குறையும் வரை தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்த அரசு உத்தரவிட வேண்டும் என அந்த சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter