Home » நகராட்சி அந்தஸ்தை பெருகிறது அதிரை !வணிகர்கள் பொதுமக்கள் வரவேற்பு !!

நகராட்சி அந்தஸ்தை பெருகிறது அதிரை !வணிகர்கள் பொதுமக்கள் வரவேற்பு !!

by
0 comment

தமிழகத்தில் புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள திமுகவின் அரசு நல்ல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

30ஆயிரம் மக்கள் தொகைக்கும் கூடுதலாக இருக்கின்ற பேரூராட்சிகளை தரம் உயர்த்தி நகராட்சிகளாக மாற்ற பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், தமிழக அரசு தமிழகத்தில் உள்ள முக்கிய ஊர்களின் 33 பேரூராட்சிகளை நகராட்ச்சியாக மாற்ற ஆனை பிறபித்து உள்ளது.

அதில் அதிராம்பட்டினமும் அடக்கம், இந்த தரம் உயர்வால் அதிரை நகரம் அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்டவைகள் துரிதமாக நடைபெறும் என எதிர் பார்க்கபடுகிறது.

நகரில் நிலவும் மின்சார பிரச்சனை,அரசு மருத்துவமனை மேம்பாடு,பேருந்து நிலைய கட்டமைப்பு என அனைத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும் நிலை உருவாகும்.

இதனால் அதிரை நகரம் தொழில் நகரமாக மாற வாய்ப்பு உள்ளதாக உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார்கள்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter