46
பட்டுக்கோட்டையில் பெட்ரோல், டீசல்
விலையை குறைக்க மத்திய அரசை
வலியுறுத்தி வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சி சார்பில் பாடை கட்டி சிலிண்டர், இருசக்கர வாகனத்துக்கு மாலை அணிவித்து
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில்
தலைமை அஞ்சலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் வழக்குரைஞர் ராமசாமி தலைமை வகித்தார். வட்டார காங்கிரஸ் தலைவர்கள் அன்பழகன்,
செந்தில், அன்சாரி ஆகியோர் முன்னிலை
வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக
துணைத்தலைவர் ராஜாதம்பி, பொதுக்குழு
உறுப்பினர்கள் கலைச்செல்வன், ராஜேந்திரன்,வைரக்கண்ணு,கிருஷ்ணமூர்த்தி சிவா,மாவட்ட, நகர், ஒன்றிய பொறுப்பாளர்கள்
கலந்து கொண்டனர்.
X
HOW