Home » அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொளி: தவறவிட்ட தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்தார் கண்டெடுக்கப்பட்ட நபர் !

அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொளி: தவறவிட்ட தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்தார் கண்டெடுக்கப்பட்ட நபர் !

by
0 comment

அதிராம்பட்டினம் புதுமனை தெருவில் விஷேசம் ஒன்றிற்கு சென்ற பெண்மணி ஒருவர் தாம் அணிந்திருந்த 5 சவரன் தங்க நெக்லசை தவறவிட்டு உள்ளார்.

இதனை அறிந்த குடும்பத்தினர் அந்தபகுதியில் சட்டை போட்டு தேடியும் கிடைக்காததால் அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு தகவல் கொடுத்தனர் அதனை அடுத்து தவறவிட்ட தங்க நகையை ஒப்படைக்க வேண்டுகோள் என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டோம்.

இது சமூக ஊடகங்கள் மூலம் காட்டு தீ போல பரவியது இதனை கண்ட பெயர் சொல்ல விரும்பாத அந்த நபர் அதில் குறிப்பிடபட்டு இருந்த மொபைல் எண்ணை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்து தங்க நகையை ஒப்படைத்து உள்ளார்.

இதனை பெற்றுகொண்ட அக் குடும்பத்தினர் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர் இதனை திரும்ப ஒப்படைக்க உதவியை அல்லாஹ்விற்கும் எடுத்து பாதுகாத்த நபருக்கும் குறிப்பாக இச்செய்தியை கொண்டு சென்ற அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter