நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை 1 மற்றும் 2ன் சார்பில் இன்று சனிக்கிழமை மாபெரும் ரத்ததான முகாம் அதிரையில் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை 1 மற்றும் 2 மற்றும் தஞ்சை அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த இரத்ததான முகாமில் 52 யூனிட் இரத்தம், தஞ்சை அரசு மருத்துவமனை மருத்துவர் ஸ்ரீதேவி மற்றும் இரத்த வங்கி ஆலோசகர் புனிதா ஆகியோரிடம் வழங்கப்பட்டது.
இந்த இரத்ததான முகாமிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் மற்றும் மாவட்ட துணை தலைவர் வல்லம் அப்துல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அதிரை கிளை 1ன் நவாப் ஷா, ஹபீப், தௌபீக் மற்றும் கிளை 2ன் பஜால், ஜப்பார், ஷபி, சிராஜுதீன், முகைதீன் மற்றும் அபூபக்கர் ஆகியோர் இம்முகாமை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மருத்துவர் ஷேக் அலி கலந்துகொண்டு இரத்ததானம் செய்தார். மேலும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.





