Saturday, April 20, 2024

அதிரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்!(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை 1 மற்றும் 2ன் சார்பில் இன்று சனிக்கிழமை மாபெரும் ரத்ததான முகாம் அதிரையில் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை 1 மற்றும் 2 மற்றும் தஞ்சை அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த இரத்ததான முகாமில் 52 யூனிட் இரத்தம், தஞ்சை அரசு மருத்துவமனை மருத்துவர் ஸ்ரீதேவி மற்றும் இரத்த வங்கி ஆலோசகர் புனிதா ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

இந்த இரத்ததான முகாமிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் மற்றும் மாவட்ட துணை தலைவர் வல்லம் அப்துல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அதிரை கிளை 1ன் நவாப் ஷா, ஹபீப், தௌபீக் மற்றும் கிளை 2ன் பஜால், ஜப்பார், ஷபி, சிராஜுதீன், முகைதீன் மற்றும் அபூபக்கர் ஆகியோர் இம்முகாமை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மருத்துவர் ஷேக் அலி கலந்துகொண்டு இரத்ததானம் செய்தார். மேலும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...