Thursday, March 28, 2024

கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்துக! முதலமைச்சர் தனிப்பிரிவில் அதிரை ஆமினா’ஸ் மனு!!

Share post:

Date:

- Advertisement -

கட்டுமான பொருட்களின் முறையற்ற விலை உயர்வால் அதிரை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அதிரை ஆமினா’ஸ் கட்டுமான நிறுவனம் மனு அளித்துள்ளது. அந்த மனுவில் “சமீபகாலமாக தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு சிமெண்ட் மூட்டையின் விலை ரூ.100/-க்கு மேலும், கம்பி டன்னுக்கு ரூ.20,000/-யை தாண்டியும் கட்டுக்கடங்காமல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதேபோல்  எம்-சாண்ட், ஜல்லி உள்ளிட்டவைகளின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகள் முடங்கிப்போய் உள்ளன. இதன் காரணமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி சொந்த வீடு கனவில் இருக்கும் சாமானிய மக்களின் கனவு நிறைவேறாமல் போகும் சூழல் உருவாகும். எனவே கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்துவதுடன் எதிர்காலத்தில் விலை நிர்ணயம் செய்ய ஏதுவாக கட்டுமான பொருட்கள் விலை நிர்ணய ஆணையத்தை தமிழக அரசு அமைத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்’ என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...