புகையிலை உபயோகிப்பவர்கள் அதிலிருந்து மீள உதவும் வகையில், புகையிலை பொருட்கள் மீது எச்சரிக்கை வாசகங்கள் மற்றும் படங்களுடன் டோல்ப்ரீ நம்பரை அச்சிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுவரை புகையிலை பொருட்களில் எச்சரிக்கை வாசகம் மற்றும் புகைப்படம் அச்சிடப்பட்டிருக்கும், இந்நிலையில் தற்போது அதனுடன் புகையிலைக்கு அடிமையானவர்களை மீட்கபதற்கான டோல்ப்ரீ நம்பர் ஒன்றையும் அச்சிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 1800 227787 என்ற டோல் பிரீ நம்பர் தேசிய புகையிலை தடுப்பு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், புகைக்கு அடிமையானவர்களை மீட்பது தொடர்பான ஆலோசனைகளை பெற முடியும். மேலும் புகையிலையால் ஏற்படும் நோய்கள், அதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் புகையிலை பொருட்களின் பாக்கெட்கள் மீது அச்சிடவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பித்தக்கதது.
More like this
அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பட்டுக்கோட்டை துணை மின் நிலைய...
மீண்டும் சென்னை – ஜித்தா விமானப் பயண சேவை தொடங்கியது சவுதியா...
கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையிலிருந்து ஜித்தா பயணிக்க நேரடி விமான சேவை இல்லாமல், குறிப்பாக புனித உம்ரா செல்வோருக்கு மிகவும் சிரமமாக இருந்து...
காணவில்லை : அதிரை யூசுஃப்!
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த இபுராமுசா அவர்களின் மகன் யூசுஃப்(வயது - 48). உடல் சுகவீனம் குறைவான இவர், நேற்று 11/09/24 புதன்கிழமை இரவு...