எந்த அடிப்படையில் ராமர் கோயில் அதே இடத்தில் கட்டப்படும் என்று RSS தலைவர் மோகன் பகவத் கூறுகிறார், அவர் என்ன உச்ச நீதிமன்ற நீதிபதியா என்று ஏஐஎம்ஐஎம் தலைவர் அசதுத்தீன் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில்தான் ராமர் கோயில் கட்டப்படும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதற்கு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசதுத்தீன் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, அயோத்தி பிரச்சனை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இப்படி ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை அவரால் எப்படி சொல்ல முடிந்தது என்றும், அவர் என்ன உச்சநீதிமன்ற நீதிபதியா அல்லது தீர்ப்பு இப்படித்தான் வரும் அவருக்கு தெரியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.
எதன் அடிப்படையில் விஹெச்பி தலைவர்களில் ஒருவரான சுரேந்தர் ஜெயின், அக்டோபர் 18, 2018-ல் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என்று கூறினார் என்றும், அவர்களிடம் ஏதாவது ரகசிய தகவல்கள் உள்ளனவா என்று ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார். டிசம்பர் 5 ஆம் தேதி அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
More like this

அதிராம்பட்டினம் ஐயுஎம்எல் சார்பில் தேர்தல் நிதி வழங்கப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) சார்பில், வரும் தேர்தலில் வாணியம்பாடி மற்றும் பாபநாசம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்காக,...

இந்தியயூனியன் முஸ்லிம்லீக் மாநில பொதுச் செயலாளருக்கு தஞ்சை நிர்வாகிகள் பாராட்டு.
அதிராம்பட்டினம் ஏப் 11தஞ்சாவூர் மாநகராட்சி இந்திய யூனியன் முஸ்லிம்லீக் 47வது வார்ட் உறுப்பினர் ஜெ. சரீப், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநில பொதுச்...

தேர்தல் களம்: அண்ணாத்துரையின் செல்வாக்கு!
பட்டுகோட்டை தொகுதியில் கா. அண்ணாத்துரை (திமுக) அவர்களைப் பொறுத்தவரை கள நிலவரம் தற்போது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. கடந்த முறை பெற்ற...





