Home » அதிரையில் தொடங்கும் உள்ளாட்சி போர் ! யாருக்கு எந்த வார்டு? உத்தேச முடிவுகள் !!

அதிரையில் தொடங்கும் உள்ளாட்சி போர் ! யாருக்கு எந்த வார்டு? உத்தேச முடிவுகள் !!

0 comment

அதிராம்பட்டினம் நகர உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அந்தந்த கட்சி பிரமுகர்கள் கையாண்டு வருகிறார்கள்.

உள்ளாட்சி பதவிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்த இருப்பதாக வெளியான தகவலை அடுத்து அனைத்து கட்சி நிர்வாகிகளும் பம்பரமாக சுழன்று வருகிறார்கள்.

இந்த நிலையில் கும்பகோணம், அதிராம்பட்டினம் நகர விரிவாக்க பணியின் காரணமாக தேர்தல் தள்ளிபோகும் வாய்ப்பு உருவாகி இருந்தாலும் சில வார்டுகளில் துண்டு போட்டு வைக்கும் பணிகளை கவுன்சிலர் பதவிக்கு காத்திருக்கும் நபர்கள் செய்து வருகிறார்கள்.

அதன்படி முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் 13வது வார்டில் மும்முனை போட்டி நிலவும் சூழல் உருவாகி இருக்கிறது.

அதேபோல முன்னாள் சேர்மன் வீடமைந்துள்ள பகுதியின் வார்டில் மட்டும் 5முனை எனவும் ஆளும் கட்சியின் துணை செயலாளர் வார்டில் 4முனை போட்டியும் நிலவுவதாக முதற்கட்ட ஆய்வில் தெரியவருகிறது.

குறிப்பாக 10 வது வார்டில் மட்டும் இயந்திர குடும்ப பின்னனி தீர்மானிக்கும் நபர்களே வெற்றிக்கு உரியவர் என்பதால் 10ல் மட்டும் சத்தம் காட்டவில்லை.

இது முதற்கட்ட ஆய்வின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட விடயம் என்பதால் கூடுதல் தகவல்களை விரைவில் எதிர்பாருங்கள்.

துள்ளியமான துடிபுள்ள செய்திகளை காண இணைந்திருங்கள்…. நமது அதிரை எக்ஸ்பிரஸ் இணைய துடிப்புடன்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter