அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சை வாஸன் கண் மருத்துவமனை இணைந்து நேற்று காலை 11.12.2021 மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் அதிராம்பட்டினம் காவல் நிலையம் எதிரிலுள்ள மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் துப்பரவு தொழிலாளர்களுக்கான சிறப்பு கண் பரிசோதனை முகாம் சங்க தலைவர் Rtn.A.ஜமால் முகமது மேற்பார்வையில் நடைபெற்றது.
இதில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர் திரு. கா.அண்ணாதுரை அவர்கள் கலந்துக்கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் துப்பரவு தொழிலாளர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.
இந்த முகாமில் அதிராம்பட்டினம் பேரூர் திமுகழக செயளாலர் திரு. இராம குணசேகரன், MMS.அப்துல் கரீம், பேரூராட்சி மன்ற முன்னால் தலைவர் S.H.அஸ்லம், மருத்துவர் ஹாஜா முகைதீன் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதகள் கலந்துக்கொண்டனர்.