பெரிய நெசவுக்காரதெருவை சேர்ந்த மர்ஹும் மீ.பா. பக்கீர் முஹமது அவர்களின் மகளும், ஒரத்தநாடு மர்ஹும் சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், கிராணி மளிகை கணக்குப்பிள்ளை S.முகமது பாரூக், மீ.பா. ஹாஜா அலாவூதீன் ஆகியோரின் சகோதரியும், A.முஹம்மது பாரூக் அவர்களின் கொழுந்தியாவும், முத்துப்பேட்டை A.சாகுல் ஹமீது அவர்களின் மாமியாரும், A.நிஜாமுதீன் அவர்களின் பெரிய மாமியாரும், M.முகமது நயீம், M.அப்துல் ஹக்கீம் ஆகியோரின் பெரிய தாயாருமாகிய S.மெஹர் பானு அவர்கள் முத்துப்பேட்டை கிட்டங்கித் தெரு அவர்களது மகள் இல்லத்தில் நேற்று (24/1/2022) இரவு 8.30 மணியளவில் வஃபாத் தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (25.1.2022), காலை 11 மணியளவில் அதிராம் பட்டினம் மரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.