Saturday, April 20, 2024

தேர்தலின்போது மக்களை ஏமாற்ற ஏதுவாக அதிரையில் தரமற்று அமைக்கப்பட்ட தார்சாலை!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை தரகர் தெருவில் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த தார்சாலை அமைக்கும் பணி, நகராட்சி தேர்தல் நெருங்குவதால் அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த சாலை தரமற்று அமைக்கப்படுவதாக எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற எஸ்.டி.பி.ஐ கட்சியினர், ஒப்பந்ததாரர்களிடம் தார்சாலையை தரமாக அமைக்க வலியுறுத்தினர். மேலும் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளை தொடர்புகொண்டு தார்சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்ய கேட்டுக்கொண்டனர். இந்த தர பரிசோதனையில் தார்சாலை தரமற்றது என நிரூபனமானால் அந்த பணிக்கான தொகையை ஒப்பந்ததாரருக்கு கொடுக்க கூடாது எனவும் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் வலியுறுத்தினர். முன்னதாக தார்சாலை தரமற்று அமைக்கப்படுவது குறித்து தகவல் தெரிவித்த அப்பகுதி இளைஞர்களை எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் பாராட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...