காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் தேர்தல் முன்னேற்பாடுகள் படு ஜரூராக நடந்து வருகிறது.
திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் தமக்கு சாதகமாக உள்ள வார்டுகளை ஒதுக்கீடு செய்திட கோரி நகர திமுகவிடம் கடிதம் கொடுத்துள்ளது.
கிணற்றில் போடப்பட்ட கல்லான கடிதம் குறித்து திமுக தரப்பில் இருந்து எந்த பதிலும் தெரிவிக்காத காரணத்தால் தலைமைக்கும் தஞ்சைக்கும் தகவலை தட்டிவிட்டதாக தெரிகிறது.
இதனிடையே அதிரையை சேர்ந்த முக்கிய புள்ளி இருவர் காங்கிரசில் சேர உள்ளார் என்றும் கண்டு கொள்ளாத திமுகவை எதிர்த்து நகரத்தலைவர் வேட்பாளராக அவரை அறிவிக்க வாய்ப்புகள் உருவாகி இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
அதுமட்டுமின்றி காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி ஒன்று அமையலாம் எனவும்,அதில் முக்கிய இடத்தில் விசிகவும் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டணி கட்சியான திமுகவுக்கு எதிராக களமாடுவது குறித்து திமுக அப்ஜக்சன் தெரிவிக்கலயா என கேட்டபோது எங்களின் மாநில தலைமையும் மாவட்டமும் நகரம் எடுக்கும் முடிவுக்கு தொண்டர்கள் ஒத்து போக வேண்டும் என அறிவுருத்தியதாக தெரிய வருகிறது.