43
பிப்ரவரி 19 ம் தேதி நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் பம்பரமாய் சுழன்று வரும் இவ்வேளையில் அதிரையில் அதிமுகவினர் மெளனம் காத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நடை பெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் எந்த களப் பணியையும் முன்னெடுக்க வில்லை என்ற குற்றச்சாட்டு தொண்டர்களால் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது
இதுகுறித்து அதிமுகவின் முக்கிய நபர் ஒருவர் கூறுகையில் விரைவாக தேர்தலுக்கான பணிகளை அதிமுக தொடங்கும் எனவும், சில அதிமுகவினர் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார்.