மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் காவன்னா சேனா சேக்தாவுது அவர்களின் மகளும், மர்ஹூம் சேனா மூனா சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், மர்ஹூம் காவன்னா சேனா நூர் முகமது, மர்ஹீம் காவன்னா சேனா முகமது ஷரீஃப், காவன்னா சேனா செய்யது கனி ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் அப்துல் வஹாப், ஜஹபர் சாதிக் ஆகியோரின் மாமியாரும், சேனா மூனா முஹம்மது முகைதீன், கருப்பன் என்கிற சேனா மூனா சேக்தாவுது, மர்ஹூம் சேனா மூனா முஹம்மது புஹாரி ஆகியோரின் தாயாருமாகிய காவன்னா சேனா பாத்திமா பீவி அவர்கள் மேலத்தெரு இல்லத்தில் நேற்று(03/02/22) இரவு 8 மணி அளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று(04/02/22) ஜும்மா தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.