Home » உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் : அதிரை நகராட்சியில் அலைமோதும் கூட்டம்!!

உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் : அதிரை நகராட்சியில் அலைமோதும் கூட்டம்!!

0 comment

வருகிற பிப்ரவரி 19 ம் தேதி பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிரை நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் போட்டியிடுவதற்காக அனைத்து கட்சி மற்றும் சுயேட்ச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (04.02.2022) வெள்ளிக்கிழமை இறுதி நாள் என்பதால் அதிரை நகராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக கூட்டம் அலைமோதுகிறது.

வேட்புமனு தாக்கல் செய்ய அதிகளவில் கூட்டம் கூடுவதனால் பொதுமக்களுக்கும், வேட்பாளர்களுக்கும் அதிரை நகர காவல்துறை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை விதித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் தங்களது பணியினை செய்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter