நடைபெற இருக்கின்ற அதிராம்பட்டினம் நகர உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு கட்சிகள் சுயேட்சைகள் போட்டியிடுகின்றன.
வரும் பிப்ரவரி 19ஆம் தேதி உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டளிக்க வலியுறுத்தி போலீஸ் அணிவகுப்பு நடந்தது. டி.எஸ்.பி., செங்கமல கண்னன் தலைமையில் ஆய்வாளர் அண்ணாத்துரை மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
பேருந்து நிலைய வளாகத்தில் இருந்து துவங்கிய அணிவகுப்பு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
இந்த அணிவகுப்பில், மோகந்தாஸ்,பயிற்சி துணை கண்காணிபாளர் லோகேஷ், ஆகியோருடன் திருச்சிற்றம்பலம் ஆய்வாளர் ஜெயா,பேராவூரணி ஆய்வாளர் செல்வி உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட காவலர்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.