அதிரை நகராட்சியில் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் மறுவரையறை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து கடந்த மாதம் நகராட்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. ஆனால் அவ்வாறு வார்டு குளறுபடி நடக்கவே இல்லையென திமுக அனுதாபிகள் சாதித்து வந்தனர். இந்நிலையில், 2வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் தனது மனைவிக்காக முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் S.H.அஸ்லம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மக்கள் தொகை/வாக்காளர் பட்டியலுக்கேற்ப வார்டு மறுவரையரை குளறுபடிகளை சரி செய்து சமத்துவம் பேணப்படும் என தெரிவித்துள்ளார்.