உக்ரைன் நாட்டில் இதுவரை அதிரையை சேர்ந்த 3 மாணவர்கள் இருப்பதாக அதிரை எக்ஸ்பிரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை அதிரை எக்ஸ்பிரஸ் ஆசிரியர் ஹசன் தொடர்புக்கொண்டு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அதிரை மாணவர்கள் 3 பேரும் விரைவில் நாடு திரும்ப நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.