Friday, April 19, 2024

அதிரை நகர்மன்ற தலைவியை தேர்வு செய்வதில் கடும் இழுபறி! இருதரப்பும் தேர்தல் களம்காண வாய்ப்பு!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை நகராட்சி மன்றத்தில் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்த போதிலும் உட்கட்சிபூசல் காரணமாக நகர்மன்ற தலைவியை தேர்வு செய்வதில் கடும் இழுபறி நிலவுகிறது. தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் 40 ஆண்டுகால சாம்ராஜியத்தை அதிரையில் வீழ்த்தி 5 ஆண்டுகாலம் வனவாசம்போல் எந்த ஒரு அதிகாரமுமின்றி நகரமன்ற தலைவராக இருந்த தனக்கு தான் தலைவர் பதவியை தர வேண்டும் என ஒரு தரப்பு சமூக வலைதளங்களில் கூறி வருகிறது.

அதேசமயம் அனைத்து தரப்பு மக்களையும் அனுசரித்து சண்டை சச்சரவுகளின்றி எல்லோருக்குமான நிர்வாகத்தை வழங்கி வந்த தங்களுக்கு தான் நகர தலைவர் பதவியை தர வேண்டும் என மற்றோரு தரப்பும் கூறுகிறது.

இத்தகைய சூழலில் தனிப்பெரும்பாண்மை கிடைத்தபோதிலும் அதிரை நகர்மன்ற தலைவியை தேர்வு செய்வதில் திமுகவில் கடும் இழுபறி நிலவுகிறது. அதேபோல் தலைமை டிக் செய்யும் ஒருவரை எதிர்த்து மற்றோருவர் களம் காணவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் நகர்மன்ற தலைவர் தேர்தலை பொறுத்தவரை கட்சியின் கொள்கைக்கு எதிராக வாக்களித்தாலும் வார்டு உறுப்பினர் பதவி பறிபோகாது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...