50
முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும் திமுக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு துணை அமைப்பாளருமான S.H.அஸ்லத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் அதிரையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் தன் மீது அவதூறு பிரச்சாரம் செய்யும் வகையில் போஸ்டர் ஒட்டிய சமூக விரோதிகளை கைது செய்யுமாறு அதிரை காவல் நிலையத்தில் S.H.அஸ்லம் புகார் அளித்துள்ளார். மேலும் அந்த புகாரில் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டிருப்பதுடன் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உருவாகி இருப்பதாக சுட்டிக் காட்டியிருக்கும் அவர், அவதூறு போஸ்டர் ஒட்டிய விஷமிகளை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளார்.