Home » அதிரையில் காவல் காத்த கவுன்சிலர் – குப்பை கொட்ட வருபவர்களை கண்டித்து அனுப்பினார் !

அதிரையில் காவல் காத்த கவுன்சிலர் – குப்பை கொட்ட வருபவர்களை கண்டித்து அனுப்பினார் !

by
0 comment

அதிராம்பட்டினம் 12 வார்டுக்குட்பட்ட பகுதியான, தக்வா பள்ளி சந்தில் பொறுப்பற்ற பொதுமக்கள் சிலர் குப்பைகளை கொட்டி வருகிறார்கள்.

இதனால் அவ்வழியாக செல்லும் பள்ளி கல்லூரி மாணவிகள் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

இங்கு கொட்டப்படும் குப்பைகளை ஆடு,மாடு நாய்கள் கிளறி சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வருகிறது அது மட்டுமில்லாமல் பள்ளிவாசலுக்கு வரும் தொழுகையாளிகள் முகம் சுழித்து செல்வது வாடிக்கையாக இருந்து வந்தது.

இதனை கவனத்தில் கொண்ட 12 வது வார்டு கவுன்சிலர் ராளியாப்சுகைப் அப்பகுதியில் முகாமிட்டு குப்பை கொட்டுபவர்களை தடுத்து அவர்களுக்கு அறிவுரை கூறினார் சுமார் 18மணி நேரம் காவல் காத்த கவுன்சிலர் கூறுகையில், இந்த பகுதியை சுகாதார மிக்க வார்டாக மாற்ற பொதும்மக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும், வீடுகளில் குப்பை சேகரிக்க வரும் துப்புரவு தொழிலாளர்களிடம் குப்பைகளை ஒப்படைக்க கேட்டு கொண்டார்.

குப்பைகளை சேகரிக்க தொழிலாளர்கள் வருகையில் பிரச்சனைகள் இருந்தால் தம்மை தாராளமாக அழைக்கலாம் என சுகைப் தெரிவித்திருகிறார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter