தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகு கடலில் மூழ்கி விபத்து.
மல்லிப்பட்டணம் கள்ளிவயல்தோட்டம் ஷாபிக் அகமது என்பவருடைய விசைப்படகு தொழிலுக்கு சென்றது, இரவே திரும்பிய விசைப்படகை துறைமுகத்திலே கட்டி விட்டு சென்றனர்.
இந்நிலையில் காலை துறைமுகம் போய் பார்க்கையில் விசைப்படகு கடலில் மூழ்கி இருந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ஷாபிக் உடனடியாக ஜேசிபி மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு வலைகள்,விசைப்படகை மேலே கொண்டு வந்தனர்.இதனால் மல்லிப்பட்டிணம் துறைமுகம் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.