Friday, January 23, 2026

அதிரை 21 வது வார்டு சாலையில் பள்ளம்,சரி செய்யுமா பேரூராட்சி!!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,அதிரை 21வது வார்டு சாலையில் பிரமாண்ட பள்ளம் ஏற்பட்டுள்ளது.

அதிராம்பட்டினம் பேரூராட்சியில் அமைந்துள்ள 21வது வார்டு சித்திக் பள்ளிக்கு எதிரே அமைந்துள்ள சந்து பகுதியில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.பள்ளத்தை தற்சமயம் கான்கீரீட் போடுவதற்கு பயன்படுத்தும் மரத்திலான பலகையை கொண்டு அப்பகுதி மக்கள் மூடிவைத்துள்ளனர்.  சாலைப்பகுதியில் நடப்பதற்கு பள்ளி மாணவ,மாணவிகள், பெண்கள் போன்றோர்  மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.இதனை உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு பள்ளத்தை சரி செய்திட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் பைசல் நம்மிடம் தெரிவிக்கையில் அதிரையில் பெரும்பாலான சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.மேலும் தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை.அதிரையில் வசிக்க கூடிய அத்தனை பேரும் அண்மைகாலமாக திருடர்களின் தொடர் கைவரிசையால் அச்சத்தில் உள்ளனர்.அதிரையை பொறுத்த வரை ஒட்டு மொத்தமாக பேரூராட்சி, காவல்துறை என அத்தனை அரசு துறைகளும் செயல் இழந்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img